மத்திய சுரங்கத் துறைஅமைச்சகம் ராஷ்ட்ரிய கனிஜ் புரஸ்கார் என்ற விருதினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது நாடு முழுவதும் சுரங்கத் தொழில் மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்குமான ஒருதேசிய விருதாகும்.
2022 ஆம் ஆண்டிற்கான இந்த ராஷ்டிரிய கனிஜ் புரஸ்கார் விருதானது, கனிமத் தொகுதிகளை ஆராய்தல், ஏலம் விடுதல் மற்றும் அதன் செயல்பாடு ஆகியவற்றினை மேற்கொள்வதற்கு வேண்டியசிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும் மாநிலங்களை ஊக்குவிக்கச் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
மூன்று வகையான கனிமங்களுக்கு ராஷ்ட்ரிய கனிஜ் புரஸ்கார் விருதானது வழங்கப்படும்.
சிறிய கனிமங்களுக்கான சுரங்க ஏலத்தில் குஜராத் மாநிலமானது, ராஷ்ட்ரிய கனிஜ் புரஸ்கார் விருதின் முதல் பரிசைப் பெற்றது.