இந்திய இராணுவமானது லடாக்கில் உள்ள ரெசாங் லா போர் நினைவிடத்தை மறு சீரமைத்துள்ளது.
இது எல்லை மெய்க்கட்டுப்பாட்டுப் பகுதியின் மற்றொரு பக்கத்திலிருந்துப் பார்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
ரெசாங் லா என்பது 1962 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் நடைபெற்ற ஒரு முக்கிய போர்த் தளமாகும்.
ரெசாங் லா, இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட லடாக் மற்றும் சீன நிர்வாகத்திற்குட்பட்ட ஸ்பாங்குர் ஏரிப் படுகை ஆகியவற்றிற்கு இடையே உள்ள எல்லை மெய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்த ஒரு மலைப்பாதை (கணவாய்) ஆகும்.