குஜராத்தின் காந்திநகர் நிலையத்தில் காந்திநகர் - மும்பை வந்தே பாரத் விரைவு இரயிலினைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கும் இந்தப் புதிய வந்தே பாரத் விரைவு இரயிலானது, இந்தியாவின் மூன்றாவது வந்தே பாரத் விரைவு இரயில் ஆகும்.
இது முதலில் புது டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இரண்டாவது இரயிலானது புது டெல்லி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா பாதையில் அறிமுகப் படுத்தப்பட்டது.
வந்தே பாரத் விரைவு இரயில் 2.0 ஆனது பயணிகளுக்கு விமானச் சேவை போன்ற சேவைகள் மற்றும் கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்டப் பாதுகாப்பு அம்சங்களை வழங்கும்.
இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பாகும்.