TNPSC Thervupettagam

வரதட்சணைச் சட்டப் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்ற கருத்து

April 20 , 2026 4 days 111 0
  • வரதட்சணை கொடுப்பவர்கள் மீது சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடர முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • இந்தத் தீர்ப்பு 1961 ஆம் ஆண்டின் வரதட்சணைத் தடைச் சட்டத்தை விளக்குகிறது; இச்சட்டம் வரதட்சணை கொடுப்பதையும் வாங்குவதையும் தடை செய்தாலும், பாதிக்கப் பட்டவர்களுக்கே பாதுகாப்பை வழங்குகிறது.
  • பிரிவு 7(3)-இன் கீழ், சமூக அழுத்தம் அல்லது நிர்ப்பந்தத்தின் பேரில் செயல்பட்டு, பின்னர் புகார் அளிக்கும் வரதட்சணை கொடுப்பவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களாகவே கருதப் படுவார்கள்.
  • இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களைத் தண்டிப்பது சட்டத்தின் நோக்கத்தை சிதைத்து விடும் என்றும், வரதட்சணைக் கொடுமை வழக்குகளைப் புகாரளிப்பதைத் தடுக்கும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
  • வரதட்சணை கொடுத்ததை ஒப்புக் கொண்டதற்காக மணப்பெண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தபோது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்