திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பி. வில்சன், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று மாநிலங்களவையில் தனிநபர் அரசியலமைப்பு திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு அல்லது தொகுதி மறுசீரமைப்புக்காக காத்திருக்காமல் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிகோருகிறது.
மக்களவையின் தற்போதைய 543 இடங்களுக்குள்ளேயே இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த இது முன்மொழிகிறது.
மேலும், குறிப்பிட்ட காலத்திற்குப் பதிலாக பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிரந்தரமாக்கவும் இது பரிந்துரைக்கிறது.
அரசியலமைப்பு (106 வது திருத்தம்) சட்டம் 2023 உடன் இடஒதுக்கீட்டை இணைப்பதை இந்த மசோதா எதிர்க்கிறது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா 2026 தோல்வியடைந்ததையடுத்து இது கொண்டுவரப்பட்டுள்ளது.