TNPSC Thervupettagam

வாகனங்கள் மூலம் தொலைதூரப் பகுதிகளுக்குச் சட்டத்தைக் கொண்டு சென்று சேர்த்தல் குறித்தப் பிரச்சாரம்

November 11 , 2021 1407 days 504 0
  • நீதித் துறை அமைச்சகமானது வாகனங்கள் மூலம் தொலைதூரப் பகுதிகளுக்குச் சட்டங்களைக் கொண்டு சென்று சேர்ப்பதற்காக வேண்டி ஒரு வார கால அளவிலான ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • இந்தப் பிரச்சாரமானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 08 முதல் நவம்பர் 14 வரை நடத்தப் பெறும்.
  • இந்தப் பிரச்சாரத்தின் கீழ், மக்கள் தங்களது உரிமைகளை கோரச் செய்வதற்கும், அவர்களின் சிரமங்களைச் சரியான நேரத்தில் நிவர்த்தி செய்வதற்கும் வழக்கிற்கு முந்தைய ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் மக்களுக்கு அதிகாரம் அளிக்கச் செய்வதற்குமாக வேண்டி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இந்த ஒரு வாரமானது தேவையுள்ள மக்களுக்கு “டிஜிட்டல் சட்ட அதிகாரமளிப்பின் மூலம் அனைவருக்கும் நீதி வழங்கலை” உறுதி செய்வதற்காக அர்ப்பணிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்