மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முதன்முறையாக இளம் கண்டு பிடிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டல் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டமானது 75வது இந்திய சுதந்திரத் தினத்தைக் குறிக்கும் வகையில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்காக தொடங்கப்பட்டது.
இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முயற்சிகளை வலுப்படுத்தச் செய்வதன் மூலம், மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பதற்கு இந்த வழிகாட்டுதல் திட்டம் உதவும்.
இந்தத் திட்டமானது, உயிரித் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நட்சத்திரக் கல்லூரியை நிறுவுவதை வலியுறுத்தச் செய்யும் வகையிலான இந்தியா முழுவதிலுமான ஒரு திட்டமாகும்.