'விக்ஷித் பாரத் 2047'-இன் முக்கியத் தூணாக, 2026 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் (ICAR) 98-வது நிறுவன தின விழாவில் 'விக்ஷித் கிருஷிக்கான செயல்பாட்டுத் திட்டம்' வெளியிடப்பட்டது.
இந்திய விவசாயத்தை பருவநிலை மாறுபாட்டைத் தாங்கக்கூடியதாகவும், தொழில் நுட்பம் சார்ந்ததாகவும், உலக அளவில் போட்டித்தன்மை கொண்டதாகவும் மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல் திட்டத்தில் 100 பருவநிலைக்கேற்ற திறமையான கிராமங்கள், ஒரு நிறுவனம்-ஒரு பெரிய கண்டுபிடிப்பு, 10 கோடி விவசாயிகளைத் தொழில்நுட்ப ரீதியாகச் சென்றடைதல், திட்டம் ICAR-100, ICAR திறந்த டிஜிட்டல் அறிவுத் தளம், போலி விதை மற்றும் பூச்சிக்கொல்லி கட்டுப்பாடு மற்றும் 2029-ஆம் ஆண்டுக்குள் ₹10,000 கோடி நிதி ஆதாரம் திரட்டுதல் ஆகிய 7 இலக்குகள் உள்ளன.
ICAR-100 திட்டமானது, வேளாண் அறிவியல் மையங்களை (KVKs) கண்டுபிடிப்பு, பருவ நிலை ஆலோசனை மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவு மையங்களாக மாற்றும்.
டிஜிட்டல் அறிவுத் தளம் இலவச பயிர் ஆலோசனைகள், வானிலை முன்னறிவிப்புகள், மண் பரிசோதனை மற்றும் சந்தை தகவல்களை வழங்கும்.