இந்தியக் குடியரசுத் தலைவர் மத்திய ரிசர்வ் காவற்படையின் (CRPF - Central Reserve Police Force) 54-வது வல்லமை தினக் கொண்டாட்டத்தின் போது (ஏப்ரல் 09) “வீர் பரிவார் செயலியைத்” தொடங்கி வைத்தார்.
இது எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் போது கொல்லப்பட்ட CRPF வீரர்களின் குடும்பங்களுக்கான ஒரு கைபேசிச் செயலியாகும்.
வீர் பரிவார் செயலியானது கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களின் கைபேசிகளில் பாதுகாப்பான முறையில் நிறுவப்பட விருக்கிறது. இது செயலிப் பட்டியலில் (Stores) இருக்காது.
இந்தச் செயலியானது பண வழங்கீடுகள், ஓய்வூதிய நலன்களை வழங்குதல் ஆகியவை தொடர்பாக இறந்த CRPF வீரர்களின் குடும்பங்களுக்கு நிகழ்நேர உதவியை அளிக்கும்.