"உலோக-கரிம கட்டமைப்புகளின் உருவாக்கத்திற்காக "சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் M. யாகி ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
வாயுக்கள் மற்றும் பிற இரசாயனங்கள் ஊடுருவக்கூடிய/பாயக்கூடிய பெரிய இடைவெளிகளைக் கொண்ட மூலக்கூறு கட்டமைப்புகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த உலோக-கரிம கட்டமைப்புகளை, பாலைவனக் காற்றிலிருந்து தண்ணீரைப் பெறுவதற்கும், கார்பன் டை ஆக்சைடைப் பிடிக்கவும், நச்சு வாயுக்களை சேமிக்கவும் அல்லது வேதியியல் எதிர்வினைகளில் வினையூக்கப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.