ஹைதராபாத்தில் நான்காவது இந்திய கிளவுட் (மேக கணினி) மண்டலம்
August 16 , 2026 3 days 53 0
மைக்ரோசாப்ட் தனது மிகப்பெரிய இந்திய தரவு மையத்தை ஹைதராபாத்தில் திறக்கிறது.
அஸூர் கிளவுட் (மேக கணினி) வணிகத்தை மைக்ரோசாப்ட் நடத்துகிறது.
நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் கிளவுட் (மேக கணினி) சந்தையில் ஒரு பெரிய பங்கைப் பெறுவதற்காக கூகுள் மற்றும் அமேசானுடன் போட்டியிடுவதால், அது தனது செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.
இந்த மையம், புனே, சென்னை மற்றும் மும்பையில் ஏற்கனவே உள்ள தரவு மையங்களுடன் சேர்த்து, இந்தியாவில் மைக்ரோசாப்டின் கிளவுட் தடத்தை நான்கு மண்டலங்களாக விரிவுபடுத்துகிறது.
இவ்வாறு, இது அந்நாட்டின் மிகப்பெரிய கிளவுட் (மேக கணினி) உள்கட்டமைப்பு வழங்குநராக மாறுகிறது.
கிளவுட் உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு சேவைகளின் முதுகெலும்பாக மாறியுள்ளது.
தொடர்ச்சியான கிளவுட் (மேக கணினி) பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த கணினித் தேவை மற்றும் விரைவான நிறுவன டிஜிட்டல்மயமாக்கல் ஆகியவற்றால் உந்தப்பட்டு, இந்தியாவின் தரவு மையத் துறை ஒரு முதிர்ச்சியான கட்டத்திற்குள் நுழைகிறது.
AWS, மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் ஆகியவை தங்களுக்குச் சொந்தமான கிளவுட் (மேக கணினி) மண்டலங்கள் மற்றும் கோலொகேஷன் கூட்டாண்மைகள் மூலம் விரிவடைந்து வருகின்றன.