டாக்டர் ஜிதேந்திர சிங் ‘இன்டிகாவ்’ (Indigau)எனப்படும் இந்தியாவின் முதலாவது கால்நடை மரபணு சிப் (சில்லு) ஒன்றினை வெளியிட்டார்.
கிர், கன்க்ரெஜ், சாஹிவால், ஓங்கோல் போன்ற உள்நாட்டுப் பூர்வீகக் கால்நடை இனங்களைப் பாதுகாப்பதற்காக இது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சில்லானது (chip) உயிரித் தொழில்நுட்பத் துறையின் கீழான, ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இது சிறந்த பண்புகளைக் கொண்ட நமது நாட்டின் கால்நடை இனங்களைப் பாதுகாத்தல் எனும் இலக்கை அடைவதிலும் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதலில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலும் உதவும்.