iGOT கர்மயோகியானது, 1 கோடி பதிவுகளைத் தாண்டியுள்ளதாக மத்தியப் பணியாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
பயனாளர் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 5 இடங்களில் உள்ள மாநிலங்கள் பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியனவாகும்.
இது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெறும் 3 லட்சம் பயனாளர்களில் இருந்து உயர்ந்துள்ளது என்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இது 30 மடங்கு வளர்ச்சி ஆகும்.
iGOT கர்மயோகி என்பது கர்மயோகித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த அரசு இயங் கலை வழிப் பயிற்சியைக் குறிக்கிறது.
இது தேசிய குடிமைப் பணிகள் பயிற்சித் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் (NPCSCB) கீழ் தொடங்கப் பட்டது.
இது திறம் மிக்க, தொழில்முறை மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள குடிமைப் பணிச் சேவையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.