2025 ஆம் ஆண்டு சன்சத் ரத்னா விருதிற்குப் பதினேழு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பாராளுமன்ற நிலைக்குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
பிரைம் பாயிண்ட் என்ற ஒரு அறக்கட்டளையால் நிறுவப்பட்ட இந்த விருதுகளானது, பாராளுமன்றத்திற்கு அவர்கள் ஆற்றிய முக்கியப் பங்களிப்பிற்காகப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்றன.
தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் (NCBC) தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையிலான தீர்ப்பாயக் குழுவினால் விருது பெறுபவர்களின் பெயர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.
திரு. மஹ்தாப், சுப்ரியா சுலே (NCP-SP), N K பிரேமச்சந்திரன் (RSP) மற்றும் ஸ்ரீரங் அப்பா பார்னே ஆகியோர் 'பாராளுமன்ற ஜனநாயகத்திற்கான சிறந்த மற்றும் நிலையான பங்களிப்பு'க்கான விருதுகளைப் பெற உள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த C.N. அண்ணாதுரை (திமுக) இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
11 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர் இந்த விருதிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.