கடல்சார் துறையில் உள்ள பெண்களுக்கான சர்வதேசத் தினத்தன்று சாகர் மேன் சம்மான் கொள்கை முன்னெடுப்பினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கடல்சார் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முக்கியக் கொள்கையானது, கடல்சார் தொழில்துறையில் அதிகாரமளித்தல், பெரும் தலைமைத்துவம், உள்ளடக்கம், பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் பாலினம் அடிப்படையிலான தடைகளை அகற்றுதல் ஆகியவற்றைக் கையாளும்.
2030 ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப வகை கடல்சார் பாத்திரங்களில் பெண்களுக்கு 12 சதவீத பிரதிநிதித்துவத்தை இந்தியா இலட்சிய இலக்காகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் கடல்சார் துறையில் 2014 ஆம் ஆண்டில் வெறும் 341 ஆக இருந்த பெண் பணியாளர்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் 2,557 ஆக அதிகரித்து உள்ளது.