TNPSC Thervupettagam

1000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை

July 8 , 2020 1783 days 731 0
  • இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் (DRDO - Defence Research and Development Organisation) தில்லியில் அமைக்கப் பட்ட 1000 படுக்கை வசதி கொண்ட ஒரு தற்காலிக அமைப்பாகும்.
  • இது மத்திய சுகாதார நலத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், டாடா குழுமம் மற்றும் ஆயுதப் படைகள் ஆகியவற்றுடன் இணைந்து DRDOவினால் 12 நாட்களில் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.
  • இந்த மையமானது சர்தார் வல்லபாய் படேல் கோவிட் – 19 மருத்துவமனையில் அமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த மருத்துவமனையில் உள்ள அறைகளானது 2020 ஆம் ஆண்டு ஜுன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களின் நினைவாக, அவர்களது பெயர் கொண்டு சூட்டப் பட்டுள்ளது.
  • தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் செயற்கை சுவாச உபகரணம் கொண்ட அறை ஆகியவை இந்திய ஆயுதப் படைகளின் கட்டளைப் பிரிவுத் தளபதியான பிக்குமல்லா சந்தோஷ் பாபு என்பவரது நினைவாக அவரது பெயர் கொண்டு சூட்டப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்