18 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள சுமார் 86 மாவட்டங்களில் புதுப்பிக்கப் பட்ட/ மறுமேம்படுத்தப்பட்ட 103 இரயில் நிலையங்கள் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அம்ரித் பாரத் இரயில் நிலையத் திட்டம் ஆனது, இரயில் நிலையங்களை நன்கு மேம்படுத்துவதற்கும் அவற்றை "நகர மையங்களாக" மேம்படுத்துவதற்குமான ஒரு நீண்டகாலத் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் மறுமேம்பாடு செய்யப் படுவதற்காக வேண்டி மொத்தம் 1,300 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் 157 நிலையங்கள் உத்தரப் பிரதேசத்திலும், 132 நிலையங்கள் மகாராஷ்டிர மாநிலத்திலும், 101 நிலையங்கள் மேற்கு வங்காளத்திலும் உள்ளன.
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் ஒன்பது தமிழ்நாடு இரயில் நிலையங்கள் புதுப்பிக்கப் பட்டுள்ளன.
அவற்றில்,
சென்னை கோட்டத்தில் உள்ள பரங்கிமலை/செயிண்ட் தாமஸ் மவுண்ட் இரயில் நிலையம்
சேலம் கோட்டத்தில் உள்ள சாமல்பட்டி நிலையம்
திருச்சி கோட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் நிலையம்
போளூர்
சிதம்பரம்
விருத்தாசலம்
மன்னார்குடி
கன்னியாகுமரியில் உள்ள குளித்துறை நிலையம்
ஸ்ரீரங்கம் நிலையத்தின் வடிவமைப்பானது இரங்கநாத சுவாமி கோயிலின் வடிவிலும், திருவண்ணாமலை நிலையம் திராவிடக் கட்டிடக்கலை வடிவிலும் அமைக்கப் பட்டு உள்ளன.