2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டிற்கான இந்தியாவின் 15வது நிதி ஆணையத்தின் இறுதி அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நிதி ஆணையங்கள் 5 ஆண்டு கால இடைவெளியில் தமது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.
இந்த அறிக்கையானது பின்வரும் 4 தொகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
தொகுதி I மற்றும் II – முதன்மை அறிக்கை
தொகுதி III – இது மத்திய அரசின் மீது கவனம் செலுத்துகின்றது. இது இடைக்காலச் சவால்கள் மற்றும் செயல்பட வேண்டிய வழிகளுடன் சேர்த்து மிக ஆழமாக மிக முக்கியத் துறைகளை ஆய்வு செய்கின்றது.
தொகுதி IV – முழுவதும் மாநிலங்களின் மீது கவனம் செலுத்துகின்றது. இது ஒவ்வொரு மாநிலத்தின் நிதி நிலைமையையும் மிக ஆழமாக ஆய்வு செய்து ஒவ்வொரு மாநிலமும் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களைக் களைவதற்காக மாநிலங்கள் வாரியாக தீர்வுகளைப் பரிந்துரைக்கின்றது.
முக்கியமான பரிந்துரைகள்
வளங்களின் கணிப்பு மற்றும் நிலைத் தன்மையைப் பராமரிப்பதற்காக 41% என்ற அளவில் செங்குத்துப் பகிர்வைத் தொடர்ந்து செயல்படுத்துதல்.
மாநிலத்தினால் மேற்கொள்ளப்படும் சுகாதாரத்தின் மீதான செலவினமானது 2022 ஆம் ஆண்டில் அதன் நிதிநிலை அறிக்கையில் 8%ற்கும் மேல் அதிகரிக்கப்பட வேண்டும்.
மின்துறைச் சீர்திருத்தங்களின் செயல்பாடுகளைப் பொறுத்து மாநிலங்களும் கூடுதலாக கடன் பெறும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.