இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகமானது (IACS) தனது 150-வது ஆண்டு விழாவை 2026-ஆம் ஆண்டு கொண்டாடியது.
1876-ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட IACS ஆனது அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்தியர்களால் நிறுவப்பட்ட ஆசியாவின் முதல் ஆராய்ச்சி நிறுவனமாக கருதப்படுகிறது.
இந்தியாவின் முதல் உருவமற்ற சிலிக்கான் சூரிய மின்கலத்தை உருவாக்குவதற்காக IACS-இல் பிளாஸ்மா மேம்படுத்தப்பட்ட ரசாயன நீராவி படிவு (PECVD) அமைப்பை அரசு திறந்து வைத்தது.
ஜெகதீஷ் சந்திர போஸ், மேக்நாத் சாஹா, சத்யேந்திர நாத் போஸ் மற்றும் சி.வி. ராமன் போன்ற தலைசிறந்த அறிவியலாளர்கள் IACS உடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
சி.வி. ராமன் IACS-இல் தான் 'ராமன் விளைவை' கண்டுபிடித்தார் என்பதோடு இது 1930-ஆம் ஆண்டில் அறிவியலுக்கான இந்தியாவின் முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.