இந்தியாவின் கடல்சார் உணவு ஏற்றுமதி 2024–25 ஆம் நிதியாண்டில் 7.45 பில்லியன் டாலரை எட்டியது.
2023–24 ஆம் நிதியாண்டில் 17,81,602 மெட்ரிக் டன்னாக இருந்த ஏற்றுமதி அளவு ஆனது 2024–25 ஆம் நிதியாண்டில் 16,98,170 மெட்ரிக் டன்னாகக் குறைந்தது.
பதப்படுத்தப்பட்ட/உறைய வைக்கப்பட்ட இறால் ஆனது முன்னணி ஏற்றுமதிப் பொருளாகத் தொடர்ந்து 5.17 பில்லியன் டாலர் வருவாயினை ஈட்டியது என்பதோடு மேலும் மொத்த கடல்சார் உணவு வருவாயில் சுமார் 70% பங்கினை அளித்தது.
முந்தைய ஆண்டில் 7,16,004 மெட்ரிக் டன்னாக இருந்த இறால் ஏற்றுமதியானது 7,41,529 மெட்ரிக் டன்னாக சற்று உயர்ந்தது.
அமெரிக்கா 2.71 பில்லியன் டாலர் மதிப்புள்ள இறக்குமதியுடன் மிகப்பெரிய கொள்முதல் நாடாகவும், அதைத் தொடர்ந்து 1.28 பில்லியன் டாலர் மதிப்புள்ள இறக்குமதியுடன் சீனாவும் இடம் பெற்றது.
உறைய வைக்கப்பட்ட மீன் மற்றும் கணவாய் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது சிறந்த ஏற்றுமதி பொருட்கள் இடங்களைப் பிடித்துள்ளன என்பதோடு இதன் மதிப்பு முறையே 622.60 மில்லியன் டாலர் மற்றும் 367.68 மில்லியன் டாலர் ஆகும்.
இந்தியா தற்போது 130க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கடல்சார் உணவுகளை ஏற்றுமதி செய்கிறது மற்றும் உயர் மதிப்பு மிக்க உலகளாவியச் சந்தைகளுக்கு மதிப்பு கூட்டப் பட்ட சலுகைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.