மத்தியப் பிரதேசம் 2026-ஆம் ஆண்டை ‘வேளாண்மை ஆண்டாக’ அனுசரிக்கவுள்ளது.
இந்த ஆண்டிற்கான கருத்துரு “வளமான விவசாயிகள் – வளமான மாநிலம்” என்பதாகும்.
விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடானது 2002-03 ஆம் ஆண்டில் ₹600 கோடியிலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் ₹27,000 கோடிக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு விலை வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் மின்னணு சந்தை அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.