கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த இந்திய அரசானது 5 ஆராய்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டங்கள் தடுப்பூசிகளிலோ அல்லது மருந்துகளிலோ கவனம் செலுத்துவதில்லை.
இந்த திட்டங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் மேற்பார்வையிட உள்ளது.
முதல் திட்டமானது வைரஸிற்கான வளர்சிதை மாற்ற உயிரிச்சுட்டு குறிப்புகளை (metabolite biomarker signature) தேடுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இரண்டாவது திட்டமானது அறுவைச் சிகிச்சை முகமூடியில் பயன்படுத்தப் படும் வைரஸிடல் (viricidal) பூச்சுகளை உருவாக்குவதாகும்.
மூன்றாவது திட்டமானது நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்க நச்சுயிர்முறிவிற்கான மேற்பரப்புப் பூச்சுகளை (antiviral surface coatings) உருவாக்குவதாகும்.
நான்காவது திட்டமானது மேற்பரப்புகளில் பயன்படுத்தப்படும்போது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும் ஒரு பொருளை உருவாக்குவதாகும்.
ஐந்தாவது திட்டமானது கோவிட்-19 இன் நோய் எதிர்ப்பொருள் அடிப்படையிலான ஒரு பிடிப்பை உருவாக்கி அதைக் கொழுப்பு (லிப்பிட்) அடிப்படையிலான ஒரு கூழ்மத்தைப் பயன்படுத்தி செயலிழக்கச் செய்வதாகும்.