TNPSC Thervupettagam

5 ஆராய்ச்சித் திட்டங்கள்

April 5 , 2020 1947 days 728 0
  • கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த இந்திய அரசானது 5 ஆராய்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • இந்த திட்டங்கள் தடுப்பூசிகளிலோ அல்லது மருந்துகளிலோ கவனம் செலுத்துவதில்லை.
  • இந்த திட்டங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் மேற்பார்வையிட உள்ளது.
  • முதல் திட்டமானது வைரஸிற்கான வளர்சிதை மாற்ற உயிரிச்சுட்டு  குறிப்புகளை (metabolite biomarker signature) தேடுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இரண்டாவது திட்டமானது அறுவைச் சிகிச்சை முகமூடியில் பயன்படுத்தப் படும் வைரஸிடல் (viricidal) பூச்சுகளை உருவாக்குவதாகும்.
  • மூன்றாவது திட்டமானது நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்க நச்சுயிர்முறிவிற்கான மேற்பரப்புப் பூச்சுகளை (antiviral surface coatings) உருவாக்குவதாகும்.
  • நான்காவது திட்டமானது மேற்பரப்புகளில் பயன்படுத்தப்படும்போது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும்  ஒரு பொருளை உருவாக்குவதாகும்.
  • ஐந்தாவது திட்டமானது கோவிட்-19 இன் நோய் எதிர்ப்பொருள் அடிப்படையிலான ஒரு பிடிப்பை உருவாக்கி அதைக்  கொழுப்பு (லிப்பிட்) அடிப்படையிலான ஒரு கூழ்மத்தைப் பயன்படுத்தி செயலிழக்கச் செய்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்