TNPSC Thervupettagam

500 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை கண்டெடுப்பு

August 10 , 2026 4 days 47 0
  • தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கண்ணு கிராமத்தில் வறண்ட பாலாறு ஆற்றுப்படுகையில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படும் விஷ்ணு சிலை ஒன்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
  • கிரானைட் கல்லால் ஆன இந்தச் சிலை சுமார் 2 அடி உயரமும் 1.5 அடி அகலமும் கொண்டது.
  • இப்பகுதியில் கோயில் கட்டுமானப் பணிகள் விரிவடைந்த விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்ததாக இது இருக்கலாம் என உள்ளூர் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
  • சிலையின் தலைப்பகுதி சற்று சேதமடைந்துள்ளது, அதே சமயம் சக்கரம் ஏந்திய கை உட்பட இரண்டு கைகள் சேதமின்றி முழுமையாக உள்ளன.
  • 1878 ஆம் ஆண்டின் இந்தியப் புதையல் சட்டத்தின்படி, ஒரு அடிக்குக் கீழே புதைக்கப்பட்டு கண்டெடுக்கப்படும் புதையல் அரசாங்கச் சொத்தாகக் கருதப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்