2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று மக்களவையில் வங்கியாளர்களின் புத்தகங்கள் சாட்சிய மசோதா, 2026 ஆனது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
காலனித்துவ காலத்தில் இயற்றப்பட்ட 1891 ஆம் ஆண்டின் வங்கியாளர்களின் புத்தகங்கள் சாட்சிய சட்டத்திற்குப் பதிலாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
பேரேடுகள், ரொக்கப் புத்தகங்கள் மற்றும் கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட வங்கிப் பதிவுகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களை சட்ட நடவடிக்கைகளில் சாட்சியமாகப் பயன்படுத்த தற்போதைய சட்டம் அனுமதிக்கிறது.
நவீன வங்கி நடைமுறைகள் மற்றும் மின்னணுப் பதிவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த மசோதா சட்ட கட்டமைப்பைப் புதுப்பிக்கிறது.
நீதிமன்றங்கள் மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளில் வங்கிப் பதிவுகளை சாட்சியமாகப் பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை இது வழங்குகிறது.