புது தில்லியில் நடைபெற்ற 7வது தேசிய சமூக வானொலி சம்மேளன(சந்திப்பு) நிகழ்ச்சியில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கலந்து கொண்டார்.
உள்ளூர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அவர்களின் மதிப்பு மிக்க பங்களிப்பிற்காக பல்வேறு சமூக வானொலி அலைவரிசைகளுக்கு சிறப்புமிகு விருதுகள் வழங்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டிற்கான விருதில் திரிபுராவின் “ஃப்ரெண்ட்ஸ் ரேடியோ” ஆனது கருப்பொருள் பிரிவில் முதல் பரிசைப் பெற்றது.