TNPSC Thervupettagam

7 மாநிலங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதி

January 9 , 2020 2048 days 890 0
  • ஏழு மாநிலங்களுக்கு ரூ. 5,908 கோடி மதிப்பிலான பேரிடர் நிவாரண நிதியை வழங்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இதில் கர்நாடகா, உத்தரப் பிரதேசம், அசாம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை அடங்கும்.
  • தென்மேற்குப் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளால் இந்த மாநிலங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன.
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு உயர்மட்டக் குழுவானது தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து (National Disaster Respond Fund - NDRF) பேரிடர் நிவாரண நிதி அளிக்கப் படுவதற்கு ஒப்புதல் அளித்தது.

NDRF பற்றி

  • பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ் தேசியப் பேரிடர் நிவாரண நிதி நிறுவப் பட்டது.
  • NDRF நிதியுடன் சேர்த்து மாநிலப் பேரிடர் நிவாரண நிதி (SDRF) என்ற நிதியும் கூடுதலாக நிறுவப் பட்டுள்ளது.
  • இந்த நிதியின் நோக்கம் இயற்கைப் பேரிடர்களிலிருந்து உடனடி நிவாரணம் வழங்குவது மட்டுமேயாகும். பயிர் இழப்பு அல்லது சொத்துகளுக்கு சேதம் ஆகியவற்றுக்கான இழப்பீடாக இந்த நிதி வழங்கப் படுவதில்லை.
  • இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India - CAG) NDRF நிதி குறித்த கணக்குகளைத் தணிக்கை செய்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்