சர்வதேச மணல் கலைத் திருவிழாவின் 9வது பதிப்பானது ஒடிசாவின் பூரி மாவட்டத்தின் கோனார்க்கில் உள்ள சந்திரபாகா கடற்கரையில் தொடங்கியது.
உலகின் புகழ்பெற்ற மணல் கலை வல்லுநர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவரான சுதர்சன் பட்நாயக் என்பவர் இந்தத் திருவிழாவின் தலைமை மேற்பார்வையாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்தக் கலை வடிவத்திற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒரு தளத்தை அளிக்கும் நாட்டில் உள்ள ஒரே மாநிலம் ஒடிசா ஆகும்.
இந்த ஆண்டு, இந்தத் திருவிழாவின் கருத்துரு, “சுற்றுச்சூழல் மற்றும் கோவிட் - 19” என்பதாகும்.