உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான A23a, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நகர்ந்து வந்த நிலையில், தென் அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய துண்டுகளாக உடைந்து உள்ளது.
A23a பனிப்பாறை 1986-ஆம் ஆண்டில் அண்டார்டிகாவின் ஃபில்ச்னர்-ரோன் பனி அடுக்கிலிருந்து (Filchner-Ronne Ice Shelf) உடைந்த நிலையில், தனது நீண்ட நகர்வைத் தொடங்குவதற்கு முன்பு பல தசாப்தங்களாக கடல் தளத்தில் தரைதட்டி நின்றது.
இது அதன் உச்ச நிலையில் சுமார் 3,900 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டிருந்தது என்ற நிலையில் இதுவே இதுவரையில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றாகவும் பல நகரங்களை விடப் பெரியதாகவும் இருந்தது.
இந்த பனிப்பாறை வெடல் கடல் வழியாக நகர்ந்து பின்னர் தென் அட்லாண்டிக் பெருங் கடலுக்குள் நுழைந்தது என்பதுடன் அங்குள்ள வெப்பமான நீர் அதன் உருகுதல் மற்றும் துண்டாதலை துரிதப்படுத்தியது.
இது உடைவதற்கு வெப்பமான கடல் நீரோட்டங்கள், அலைகளின் தாக்கம் மற்றும் உருகிய நீர் ஆகியவற்றுக்கு நீண்ட காலம் வெளிப்பட்டதே காரணமாக இருப்பதுடன் இது அண்டார்டிக் சூழலில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கிறது.