மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்-பிளஸ் (ASEAN Defence Ministers’ Meeting-Plus - ADMM-Plus) நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டார்.
மியான்மர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் சீன் வின் உடன் இணைந்து “ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) அமைப்புக்கான இராணுவ மருத்துவம் குறித்த கையேட்டை” அவர் வெளியிட்டார்.
10 ஆசியான் நாடுகளுடன், ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற எட்டு நாடுகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன.