மத்திய அரசானது அகில இந்தியச் சேவைகளுக்கான ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகளை AGMUT (Arunachal Pradesh, Goa, Mizoram, and Union Territory) - அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகிய பணியிடப் பிரிவுடன் இணைத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 என்ற சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு அவசரச் சட்டம் மூலம் இது செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையானது குறிப்பிட்டுள்ள ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் ஜம்மு-காஷ்மீரில் பணிபுரிய அனுமதிக்கும்.
அகில இந்தியச் சேவைகளானது ஐபிஎஸ், ஐஏஎஸ் மற்றும் ஐஎஃப்ஓஎஸ் அதிகாரிகளை உள்ளடக்கியதாகும்.