மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுக்கு 1,004 கோடி ரூபாய் அளவிலான கூடுதல் நிதி உதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மூலதனச் செலவினங்களுக்காக வேண்டி மாநிலங்களுக்கு என்று புதிதாக தொடங்கப் பட்ட சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் இது வழங்கப்படுகிறது.
இரு மாநிலங்களும் குடிமக்களை மையமாகக் கொண்ட நான்கு சீர்திருத்தங்களில் மூன்றை நிறைவு செய்துள்ளன.
இவை ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை சீர்திருத்தங்கள், எளிதில் வணிகம் தொடங்குவதற்கான சீர்திருத்தங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை நிறைவு செய்துள்ளன.
4வது சீர்திருத்தம் பயன்பாட்டுச் சீர்திருத்தம் மற்றும் மின் துறை சீர்திருத்தம் ஆகும்.