இந்திய ராணுவமானது கட்டளைப் புலனாய்வு மற்றும் தளவாட மேலாண்மைக்காக கௌடில்யா மற்றும் Q-FORCE ஆகிய இரண்டு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தளங்களை உருவாக்கியுள்ளது.
கௌடில்யா என்பது தரவுப் பகுப்பாய்வு, முடிவெடுப்பதற்கான ஆதரவு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலை ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் AI-ஆதரவு பெற்ற கட்டளைப் புலனாய்வுத் தளமாகும்.
Q-FORCE என்பது சரக்கு கையாளுதல், விநியோக சங்கிலி மேலாண்மை மற்றும் பராமரிப்பு செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் தளவாட பயன்பாடாகும்.
கௌடில்யா கட்டமைக்கப்பட்ட தரவு உருவாக்கம் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு இயற்கை மொழி செயலாக்க (NLP) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
2027-ஆம் ஆண்டிற்குள் AI ஒருங்கிணைப்பு மற்றும் தரவு மையப்படுத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான இந்திய இராணுவத்தின் திட்டத்திற்கு இந்தத் தளங்கள் துணைபுரிகின்றன.
இதற்கு முன்னர் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட AI பயன்பாடுகளில், சிந்தூர் நடவடிக்கையின் போது சஞ்சய் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்ட ECAS மற்றும் TRINETRA ஆகியவை அடங்கும்.