நிதி ஆயோக், அடல் புத்தாக்கத் திட்டம் ஆகியவை நாஸ்காம் நிறுவனத்துடன் இணைந்து சுதந்திர தினத்தன்று “ATL AI Step up தொகுதியை” தொடங்கியுள்ளது.
இந்தத் தொகுதியானது இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுக் கல்வி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல இருக்கின்றது.
AI ஸ்டெப் அப் தொகுதியானது செயற்கை நுண்ணறிவின் அடிப்படையைக் கற்ற பிறகு தங்களுடைய அறிவுத் தளத்தை விரிவுபடுத்த விரும்புபவர்களுக்கு “நீங்களாகவே அதைக் கற்றுக் கொள்ளுங்கள்” என்ற ஒரு தொகுதியை அளிக்கின்றது.
மேலும், இந்தத் தொகுதியைக் கற்பதற்கு எந்தவொரு தகுதி நிலையும் (பின் புலமும்) தேவையில்லை.