இராஜஸ்தான் அரசாங்கம் ஆனது மருத்துவக் கல்வியில் ஆளுகை, வெளிப்படைத் தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு டிஜிட்டல் தளமான "e-ஸ்வஸ்த்ய சம்வாத்" தளத்தினைத் தொடங்கியது.
இந்தத் தளம் ஆனது விரைவாக முடிவெடுப்பதற்காக கொள்கை வகுப்பாளர்கள், மருத்துவ நிறுவனங்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலிய ஊழியர்கள், மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்களை இணைக்கிறது.
இந்தக் கூட்டங்கள் ஆனது, வாரத்திற்கு இரண்டு முறை காணொளிக் காட்சிகள் மூலம் முதலில் மூத்த நிலை அதிகாரிகள், பின்னர் திறந்த நிலைத் தொடர்பு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன.
சுகாதாரத் திட்டங்கள், உள்கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு, முதலமைச்சர் அலுவலக உத்தரவுகள், CMIS மற்றும் CP-கிராம்கள் மூலம் குறை தீர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் ஆகியவை இதன் விவாதங்களில் அடங்கும்.
இராஜஸ்தான் மருத்துவக் கல்வி முறை முழுவதும் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்த அறிக்கைகள் கோரப் படுகின்றன.