TNPSC Thervupettagam

GenAI மையம் - கர்நாடகா

February 1 , 2026 12 days 94 0
  • 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு புத்தொழில் சூழலமைப்பில் கர்நாடகா முன்னணியில் உள்ளது.
  • கர்நாடகா இந்தியாவின் GenAI (உருவாக்க செயற்கை நுண்ணறிவு) புத்தொழில்களில் 39%-ஐக் கொண்டுள்ளது என்ற நிலையில் இது நாட்டில் மிக உயர்ந்த பங்காகும்.
  • 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் 890 GenAI புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 240 நிறுவனங்களிலிருந்து ஏற்பட்ட அதிகரிப்பாகும்.
  • 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் புத்தொழில் சூழலமைப்பு உலக அளவில் மூன்றாவது பெரிய சூழலமைப்பாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • கர்நாடகாவில் 43 மாநில அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன என்ற நிலையில் அவை ஆழமான தொழில் நுட்பம் மற்றும் GenAI புத்தொழில்களுக்குத் தேவையான திறமையான மனிதவளத்தை ஆதரிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்