மத்திய அமைச்சரவையானது சரக்குகள் மற்றும் சேவை வரி கட்டமைப்பை (GSTN – Goods and Services Tax Network) அரசுக்கு சொந்தமான நிறுவனமாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய மறைமுக வரி வசூலிப்பு முறையின் தகவல் தொழில்நுட்ப முதுகெலும்பான இது தற்போது 100% அரசுக்கு சொந்தமாகி உள்ளது.
தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து GSTN-இன் 49% பங்குகளைக் கொண்டுள்ளன. மீதமுள்ள 51% பங்குகளானது 5 தனியார் நிதி நிறுவனங்களிடம் உள்ளன.
முன்னதாக, 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் 50% பங்குகளை மத்திய அரசும் மீதமுள்ள 50% பங்குகளை மாநில அரசுகள் இணைந்தும் வைத்து ஒரு அரசு நிறுவனமாக GSTN-ஐ அமைக்க GST ஆணையமானது ஒப்புக் கொண்டது.