மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடலோர காவல் படையின் ரோந்துக் கப்பலான 'ICGS வராஹாவை' சென்னை துறைமுகத்தில் முறையாக இணைத்தார்.
ICGS வராஹா என்ற ரோந்துக் கப்பலானது இந்துஸ்தான் வானூர்தியியல் நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரட்டை என்ஜின் கொண்ட ஏ.எல்.எச் ஹெலிகாப்டர்களை இயக்கும் திறன்களைக் கொண்டுள்ளது.
இந்தக் கப்பலானது படைத்தலைவரான துஷ்யந்த் குமார் என்பவரால் தலைமை தாங்கப்பட இருக்கின்றது.
இது கடலோர காவல் படை கட்டுப்பாட்டுப் (மேற்கு) பிராந்தியத்தின் நிர்வாக மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் புதிய மங்களூரில் அமையவிருக்கிறது.