TNPSC Thervupettagam

K.S. சிவப்பா மற்றும் K. நீலம்மா இடையிலான வழக்கு 2025

November 4 , 2025 8 days 100 0
  • 18 வயது நிரம்பிய பிறகு, வழக்கு இல்லாமல் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களால் செய்யப்படும் எந்தவொரு சொத்து விற்பனை அல்லது பரிமாற்றத்தையும் எதிர்த்து சிறார்கள் வழக்கு தொடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • வயது வந்தவர்கள் தாங்களே சொத்தை விற்பது அல்லது பரிமாற்றுவது போன்ற தெளிவான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அத்தகையப் பரிமாற்றங்களை ரத்து செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.
  • K.S. சிவப்பா மற்றும் K. நீலம்மா இடையிலான வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
  • 1956 ஆம் ஆண்டு இந்து சிறுபான்மையினர் மற்றும் பாதுகாவலர் சட்டத்தின்படி, பிறவிக்குரிய காப்பாளர் அந்த சிறாரின் நலனுக்காக செயல்பட வேண்டும்.
  • நீதிமன்ற அனுமதியின்றி காப்பாளர்கள் சிறாரின் அசையாச் சொத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடியாது.
  • கால வரையறைச் சட்டம், 1963 ஆனது, நிறை/உரிமை வயதை அடைந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தகைய சொத்துப் பரிமாற்றத்தை எதிர்த்து வழக்குத் தொடுக்கவோ அல்லது ஒதுக்கி வைக்கவோ ஒரு நபருக்கு வாய்ப்பளிக்கிறது.
  • அப்துல் ரஹ்மான் மற்றும் சுக்தயாள் சிங் 1905 என்ற வழக்கில் வழங்கப் பட்ட ஒரு முன்னுதாரணத்தை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்