ஹிங்கோலி வருவாய்ப் பிரிவானது மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 225 ஹெக்டேர் அளவிலான நிலங்களின் உரிமைகளை லேசர் குறுக்கீட்டு அளவி புவி ஈர்ப்பு அலை ஆய்வகத்திற்கான துணிகர (LIGO) நிறுவனத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
நாட்டிற்குள் முதன்மை வசதிகளை ஒழுங்கமைப்பதற்காக இந்த நிலங்களானது ஒப்படைக்கப் பட்டது.
இந்த முயற்சியானது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு ஈர்ப்பு அலைகள் பற்றிய ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கான சில மாற்றுகளை வழங்கும்.
LIGO என்பது காஸ்மிக் ஈர்ப்பு அலைகளைக் கண்டறிவதற்கும் அது குறித்து சில சோதனைகளை மேற்கொள்வதற்குமான ஒரு பெரிய ஆய்வகமாகும்.