MegREAP என்பது மேகாலயாவில் துரிதப்படுத்தப்பட்ட மற்றும் உள்ளடக்கிய நிறுவனங்கள் மூலம் மீளுருவாக்கம் செய்யும் பொருளாதாரங்களுக்கான முன்னெடுப்பு என்பதாகும்.
இது 2028 ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தில் பத்து பில்லியன் டாலர் மதிப்பிலான பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பு நிலையான வேளாண்மை, மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள், காடு சார்ந்த நிறுவனங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இது உள் மாநில மற்றும் பாரம்பரியச் சமூகங்களை ஈடுபடுத்துவதன் மூலம் சமூக உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கிறது.
இது நிதி மற்றும் முதலீட்டை எளிதாக்கும் அதே வேளையில் உள் மாநில நிறுவனங்களை உள்நாட்டு மற்றும் உலகளாவியச் சந்தைகளுடன் இணைக்கிறது.