TNPSC Thervupettagam

MOSAiC ஆர்க்டிக் கடல் ஆய்வு

October 7 , 2019 2128 days 637 0
  • கேரளாவைச் சேர்ந்த 32 வயதான துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளரான விஷ்ணு நந்தன் என்பவர் MOSAiC ஆர்க்டிக் ஆய்வில் பங்கேற்பதற்காக உலகெங்கிலும் இருந்து வரும் 300 விஞ்ஞானிகளில் ஒரே இந்தியராக உருவெடுக்க விருக்கின்றார்.
  • MOSAiC (ஆர்க்டிக் காலநிலை ஆய்விற்கான பல்துறை நகர்வு ஆய்வகம் - Multidisciplinary Drifting Observatory for the Study of Arctic Climate) என்பது வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒரு மிகப்பெரிய ஆர்க்டிக் கடல் ஆய்வு ஆகும்.
  • ஒரு வருடம் முழுவதும் வட துருவத்தில் ஒரு மிகப்பெரிய அளவிலான ஆய்வை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
  • MOSAiC ஆனது ஆர்க்டிக் பகுதியின் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வது மற்றும் அந்தக் காலநிலை மாற்றம் உலகின் பிற பகுதிகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து ஆய்வு செய்வது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • ஜெர்மனியைச் சேர்ந்த கப்பலான “போலார்ஸ்டெர்ன்” இந்த ஆய்வில் பங்கேற்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்