உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் (NAM) 19வது இடைக்கால அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது.
உகாண்டா 2024-26 ஆம் ஆண்டிற்கான NAM தலைமை பொறுப்பினைக் கொண்டுள்ள இந்தியா, வளர்ந்து வரும் நாடுகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது குறித்த விவாதங்களை நோக்கி உறுப்பினர் நாடுகளை வழிநடத்தியது.
வளர்ந்து வரும் நாடுகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதையும் பகிரப்பட்ட உலகளாவிய வளங்களுக்கான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதையும் இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Deepening Cooperation for Shared Global Affluence" என்பதாகும்.
இந்த அமைச்சர்கள் கூட்டத்தின் போது, வளர்ந்து வரும் நாடுகளுடன் அரசுமுறை மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக NAM உறுப்பினர் நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்பட்டது.
NAM கூட்டணியின் ஸ்தாபன உறுப்பினரான இந்தியா, இந்த இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் விழுமியங்களுக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப் படுத்தியது.