March 30 , 2021
1558 days
699
- மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் 7வது வருடாந்திர NATHEALTH உச்சி மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றினார்.
- இந்த மாநாடு கோவிட் பாதிப்பிற்குப் பிறகு இந்திய சுகாதார அமைப்பின் விரிவாக்கம் பற்றியதாகும்.
- 2017 ஆம் ஆண்டில் அரசு தேசிய சுகாதாரக் கொள்கையை வெளியிட்டது.
- வயது பாகுபாடின்றி அனைவருக்கும் உயரிய சுகாதார தரத்தையும் நல்வாழ்வையும் அளிப்பது தான் இக்கொள்கையின் நோக்கமாகும்.
குறிப்பு
- வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான 6 முக்கிய தூண்களில் சுகாதாரமும் ஒன்றாக 2021 – 22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
- 2021 – 22 ஆம் ஆண்டில் சுகாதாரத்திற்காக ரூ.2,23,846 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
- இது கடந்த ஆண்டை விட 137% அதிகமாகும்.
- இது 2025 ஆம் ஆண்டிற்குள் GDPயின் அளவில் 2.5 சதவீதமாக சுகாதாரச் செலவினங்களை அதிகரிப்பதோடு பொருந்திப் போகும் படியாக உள்ளது.

Post Views:
699