கல்வி அமைச்சகம் இந்த ஆண்டுக்கான தேசிய நிறுவனங்கள் தரவரிசை கட்டமைப்பு (NIRF) தரவரிசையை வெளியிட்டுள்ளது.
மருந்தாளுனர் பிரிவில் டெல்லியின் ஜாமியா ஹம்தார்ட் பல்கலைக் கழகம் ஆனது மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது இரண்டாவது இடத்தில் உள்ளது.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகமானது, இந்த ஆண்டின் தர வரிசையின் ஒட்டு மொத்தப் பிரிவில் சிறந்த பல்கலைக்கழகமாக அறிவிக்கப் பட்டது.
அதைத் தொடர்ந்து, பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்விக் கழகமானது இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேற்கூறியப் பட்டியலில் மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம் மற்றும் கான்பூர் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி கழகம் ஆகியவை இந்தத் தரவரிசையின் ஒட்டு மொத்தப் பிரிவுகளில் முதல் ஐந்து நிறுவனங்களாக உள்ளன.
இந்த ஆண்டு, கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகத்தினைத் தொடர்ந்து காரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம், ரூர்க்கி இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம் மற்றும் கௌகாத்தி இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம் ஆகியவை முதல் 8 இடங்களைப் பிடித்ததால், இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகங்கள் இந்தப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தின.
இதில் டெல்லி எய்ம்ஸ் ஒன்பதாவது இடத்தையும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளன.