பாரத் ரங் மஹோத்சவம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரையில் புது டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த ஆண்டானது 22வது பாரத் ரங் மஹோத்சவத்தினைக் குறிக்கிறது.
இந்திய வரலாற்றில் இடம் பெறாத, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றிய நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதையும், அவர்களைப் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இது நோக்கமாக உள்ளது.
தேசிய நாடகப் பள்ளி நிர்வாகமானது 20 ஆண்டுகளுக்கு முன்பு பாரத் ரங் மஹோத்சவத்தினைத் தொடங்கியது.
தேசிய நாடகப் பள்ளி நிர்வாகமானது சங்கீத நாடக அகாடமியினால் அதன் ஓர் அங்கமாக 1959 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது 1975 ஆம் ஆண்டில் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாக மாறியது.