மிகப் பெரிய மின்துறை நிதி நிறுவனத்தை உருவாக்கும் நோக்கில், ஊரக மின்னாக்கக் கழகத்தை (REC Limited), மின் நிதி நிறுவனத்துடன் (PFC) இணைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில், REC-இல் இந்திய அரசாங்கத்திற்கு இருந்த 52.63% பங்குகளை PFC நிறுவனம் ₹14,500 கோடிக்கு வாங்கியது.
இந்த இணைப்பிற்குப் பிறகு, REC-இன் அனைத்து சொத்துக்கள், பொறுப்புகள், உரிமைகள் மற்றும் கடமைகள் PFC-க்கு மாற்றப்படும் என்பதோடு மேலும் 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 230-232 பிரிவுகளின் கீழ் REC ஒரு தனி சட்டப்பூர்வ நிறுவனமாக செயல்படுவது முடிவுக்கு வரும்.
பொதுத்துறை வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) அளவு மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில், 2026-27 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டின் ஒரு பகுதியாக இந்த இணைப்பு அறிவிக்கப்பட்டது.
மின் நிதி நிறுவனம் (PFC) 1986 ஆம் ஆண்டு 16 ஜூலை மாதத்தில் இணைக்கப்பட்டது என்பதுடன் இது மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது, மேலும் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 'மகாரத்னா' அந்தஸ்தைப் பெற்றது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2010 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று PFC-ஐ உள்கட்டமைப்பு நிதி நிறுவனமாக (IFC) வகைப்படுத்தியது.