கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக Molbio Diagnostics நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் முதல் உள்நாட்டு மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) பரிசோதனையான Truenat HR-HPV-Plus சோதனையை இந்தியா அதிகாரப்பூர்வமாக சரிபார்த்து அங்கீகரித்துள்ளது.
சர்வதேச மதிப்பீட்டு அளவுகோல்களை முழுமையாகப் பூர்த்தி செய்த முதல் உள்நாட்டு உடனடி நோயறிதல் HPV பரிசோதனையாக இது உருவெடுத்துள்ளது.
ஆய்வக வசதிகள் இன்றி குடிநீரில் உள்ள ஆர்சனிக் மாசுபாட்டை விரைவாகக் கண்டறியும் கையடக்கக் கருவியான ArsenSafe-ஐ புவனேஸ்வர் இந்திய தொழில்நுட்பக் கழகம் உருவாக்கியுள்ளது.
ArsenSafe என்பது, குறைந்தபட்ச பயிற்சியுடன் நீரை மூலமாகக் கொண்டு நேரடியாக நீரைப் பரிசோதிக்கக் கூடிய, கையில் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் களத்தில் பயன்படுத்தக்கூடிய ஒரு சாதனமாகும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முன்னாள் வீரரும், பிரபல துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா, 2026 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தனது 49வது வயதில் காலமானார்.
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது அசாதாரண வீரத்தை வெளிப்படுத்தியதற்காக கீர்த்தி சக்ரா விருது பெற்ற லான்ஸ் நாயக் ஏ. மீனாட்சி சுந்தரத்திற்கு தமிழ்நாடு அரசு ₹48 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தது.
முற்றிய புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான நாட்டின் முதல் ரேடியோலிகண்ட் சிகிச்சையான (RLT) 'ப்ளூவிக்டோ'வுக்கு இந்தியா ஒப்புதல் அளித்து உள்ளது.
தானாக முன்வந்து ஊதியமின்றி இரத்த தானம் செய்பவர்களை கௌரவிக்கவும், பாதுகாப்பான இரத்த தானத்தின் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று உலக இரத்த தானம் செய்வோர் தினம் அனுசரிக்கப் படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு One Drop of Humanity. Give Blood. Save Lives என்பதாகும்.
முதியோர் மீதான உடல், உளவியல் மற்றும் நிதி ரீதியான வன்கொடுமைகள் மற்றும் அவர்களைப் புறக்கணிப்பது உள்ளிட்ட முதியோர் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 அன்று உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் (WEAAD) 2026 அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Beyond Awareness: Making Elder Abuse Prevention Work.