இந்தியா தனது RELIEF (ஏற்றுமதி எளிதாக்கத்திற்கான மீள்திறன் மற்றும் தளவாட இடைக்கீடுகள்) திட்டத்தை எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது.
மேற்கு ஆசிய வர்த்தகப் பாதைகளில் ஏற்பட்ட இடையூறுகளால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் திட்டமானது 2026 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று தொடங்கப்பட்டது.
ஏற்றுமதி காப்பீட்டு ஆதரவை வழங்குவதற்காக இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தின் (ECGC) மூலம் இது செயல்படுத்தப்படுகிறது.
சரக்கு கட்டண உயர்வு, காப்பீட்டுப் பிரீமியங்கள் மற்றும் போர் தொடர்பான வர்த்தக அபாயங்களை ஈடுசெய்வதன் மூலம் இத்திட்டம் ஏற்றுமதியாளர்களுக்கு உதவுகிறது.
சூயஸ் கால்வாய் மற்றும் மேற்கு ஆசிய வழித்தடங்கள் போன்ற உலகளாவிய வர்த்தகப் பாதைகளில் எகிப்து மற்றும் ஜோர்டான் முக்கியப் பங்கு வகிப்பதால் அவை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த விரிவாக்கம் இந்தியாவின் ஏற்றுமதித் திறனை வலுப்படுத்துவதையும், நிலையான சர்வதேச விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.