TNPSC Thervupettagam

Road Map 2030 (செயல்திட்டம் 2030)

May 7 , 2021 1533 days 760 0
  • காணொலி மூலம் நடைபெற்ற இருதரப்பு உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஐக்கிய ராஜ்ஜிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் பங்கேற்றனர்.
  • இந்த உச்சி மாநாட்டின் போது “Road Map 2030” (செயல்திட்டம் 2030) எனப்படும் ஒரு இலட்சியம் மிக்கத் திட்டத்தினை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
  • இரு நாடுகளிடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இத்திட்டமானது உதவும்.

முக்கிய குறிப்புகள்

  • இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்ற மார்க் 2 எனப்படும் இலகுரக போர் விமானத்தினை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்கு இந்தியாவும் ஐக்கிய ராஜ்ஜியமும் ஒப்புக் கொண்டுள்ளன.
  • COP 26 மாநாட்டில் ஒரு மகத்தான பலனை வழங்குவதற்காக இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
  • இந்தச் செயல்திட்டமானது இந்தியாவுக்கும் ஐக்கிய ராஜ்ஜியத்துக்கும் இடையே சுகாதாரத் துறையின் மீதான கூட்டாண்மையை விரிவுபடுத்தும்.
  • இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத் தடைகளை நீக்கவும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
  • இந்தியா-ஐக்கிய ராஜ்ஜிய ஒன்றிணைவுஅமலாக்கம் (Implement “India-UK Together”) (SAATH – SAATH) என்பது ஒரு கூட்டு கலாச்சாரப் பரிமாற்றத் திட்டமாகும்.
  • மேலும் குஜராத் சர்வதேச நிதியியல் தொழில்நுட்ப நகரின் (GIFT City) மேம்பாட்டினைத் துரிதப்படுத்துவதற்கான ஒத்துழைப்பினை அதிகப்படுத்துவதற்கும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்