TNPSC Thervupettagam

RTI சட்டத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு

October 19 , 2025 16 hrs 0 min 14 0
  • 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை (RTI) சட்டம் அமல்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.
  • தகவல் அறியும் உரிமை (RTI) சட்டம் ஆனது, ஆளுகையில்/நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியன்று இயற்றப்பட்டது.
  • 1990 ஆம் ஆண்டுகளில் இராஜஸ்தானில் மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் (MKSS) தலைமையிலான அடிமட்ட அளவிலான செயல்பாடு மற்றும் பொது விசாரணைகளிலிருந்து RTI சட்டம் உருவானது.
  • இந்த இயக்கமானது 2005 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதியன்று பாராளுமன்றத்தினால் தேசியச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக மாநில அளவிலான பல RTI சட்டங்களுக்கு வழி வகுத்தது.
  • அரசியலமைப்பின் 19வது சரத்தின் கீழ் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் ஒரு பகுதியாக தகவல் அறியும் உரிமையை RTI சட்டம் அங்கீகரிக்கிறது.
  • 2023–24 ஆம் ஆண்டில் 1.75 மில்லியனுக்கும் அதிகமான RTI விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப் பட்டன என்ற நிலையில், மேலும் இது 67,615 நிராகரிக்கப்பட்டப் பதிவுகளுடன் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட விண்ணப்பங்கள் தாக்கலானது இரு மடங்கு அதிகமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்